A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, March 8, 2013

பெண் எனும் பெருஞ்செல்வம்


சத்திரத்தில் சாமியார்

சமையலறையில் மாமியார்

உலகில் உன்னைவிட பாவியார்

உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்
 


வேலையிலே எஜமான்

மாலையிலே உன்மான்(Man)

இப்படியே நீஏனம்மா அலைவான்

சபித்துவிடு இருவரும் தொலைவான்
 


 
இலக்கியத்தில் மட்டும்உனை பூவாய்

இல்லத்தில் எப்போதும்நீ நாராய்

மொத்தத்தில் நீபாலைவன தேராய்

எழுந்துவாம்மா ஆணுக்கு நிகராய்

 

நாட்டின் பெருஞ்செல்வம் நீயம்மா

நாவிழந்து நிற்பதுஉனக்கு தகுமா

நமக்கெல்லாம் நீதானே தாயம்மா

கூனிக் குறுகுவது நீஏனம்மா

 

விண்வெளியில் கால்பதித்தாய்

வீரமண்ணில் களம்பதித்தாய்

இன்னுமென்ன உறக்கமம்மா

கற்றுயர்ந்து ஆணையிடு ஆணையும் மிஞ்சிவிடு

 

நன்றி,

அ.பகீரதன்


No comments:

Post a Comment