A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Monday, November 25, 2013

புலி




சிங்கத்திற்கு வாழ்க்கைப்பட

புலிக்கு என்ன தலையெழுத்து?

 

புலிக்கு

பலதடவை குறிவைத்தார்கள்

தப்பிக்கொண்டது

இந்தத் தடவை பொறிவைத்ததால்

சிக்கிக் கொண்டதோ?

 

புலி வாலாட்டுவதில்லை

இப்போது புலி இல்லை அதனால்

தெருநாய்களும்  வாலாட்டுகின்றன

சொறிநாய்கள் கால்மேல் கால்போட்டு காலாட்டுகின்றன

 

எலி மருந்துக்கெல்லாம்

புலி சிக்குவதில்லை

புலிக்குத் தெரியும் அதன் இலக்கு

 

அன்று

சிலருக்கு புலியை பிடிக்கவில்லை-ஏனென்றால்

புலியின் மீது ஏறி சவாரி செய்ய முடியாது என்பதால்

 

இன்றும்

சிலருக்கு புலியை  பிடிக்கவில்லை

புலி இனி சரிவராது என்பதாலோ

 

மேனகையை அனுப்பியும்

புலியை வீழ்த்தமுடியவில்லை

மேதகுகள் சேர்ந்து வஞ்சகம் தீர்த்துவிட்டார்கள்

 

வேடன் மாறுவேடத்தில் வருவான் என்று

புலிக்குத் தெரியும்

வேடன் நவீன துப்பாக்கியோடு வருவானென்று

அதுக்கு எப்படித் தெரியும்

 

புத்தி மான்கள் குதூகலமாய்

அரியாசனம் ஏறுகின்றன

சிங்கத்திற்கு இரையாகப் போவது தெரியாமல்

 

வடகாட்டில் குரங்குகள் பட்டாசு கொளுத்துகின்றன

சிம்மாசனம் கிடைத்துவிட்டதாம்

 

புலியை  பிடித்தவர்களுக்கு- இப்போதும்

புலியைப்  பிடிக்கிறது

புலிக்கு  வால்பிடித்தவர்களிற்கு மட்டும்

இப்போ கிலி பிடித்திருக்கிறது

 

நன்றி,

அ.பகீரதன்

 

Sunday, November 24, 2013

யார் இந்த பொன்ராசா?


பொன்கொடுத்த பொன்ராசா

இப்போதும் அழுகிறான்

மண்போனது கவலையில்லலையாம்

தன்பவுண்  கேட்கிறான்

 

புலி வீழ்ந்த இடத்தில்

புல் முளைத்துவிட்டதாம்

பூங்கா கட்ட காசு கேட்கிறான்

மாவீரர்களுக்கு பூமாலை கட்டித் தருவானாம்

 

ஐக்கிய இலங்கைக்குள்

ஆயிரம் தீர்வாம்-கை

நக்கிய படியேமேலே வரலாமாம்

ஈழம் என்பது கோலமாம்-இது

கனகாலமாய் அலங்கோலமாம்

 

பொன்ராசாவுக்கு

ஃபெடரல் சிஸ்ரம் பிடிபடவில்லை

கேட்டால் பின்நாளில் பார்க்கலாம் என்கிறான்

ஏ9 வீதியைப் பார்த்து  ஏமாந்து போய்விட்டான் போலும்

 

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா,

ஒற்றை ஆட்சி ஒன்றுதான்

எங்களுக்கு மீட்சியாம்-அதற்கு

எஞ்சிய சனம்தான் சாட்சியாம்

கஞ்சியாவது குடித்தால் போதுமாம்

 

அப்படியென்றால்

ஈழம் என்ன எட்டாப்பழமா? என்றேன்

ஈழம் அதெல்லாம் எட்டப்பன் இருக்கும்வரை

கிட்டாது என்றான் அவன்

 

மீண்டும்,

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா சிரித்தபடி சொன்னான்,

ஈழம் எனப்படுவது நமது சாபம்

இந்தியா இருக்கும்வரை நமக்கது பாவம்

எதற்கடா தம்பி நமக்கு முற் கோபம்

 

பொன்ராசா,

ஈழம் என்பது நம்தேவை

முடிந்தால் செய்சேவை

இல்லையேல் அடக்கிவை உன்நாவை

 

மேலும் சொன்னேன்,

செல்வாவின் கொள்கை ஈழம்

அவர்சிந்தனை மிகப்பெரிய ஆழம்

பிரபா போட்டார் பெரிய பாலம்

அதைவிடாமல் பிடித்தால் லாபம்

 

பொன்ராசா நக்கலாய் சொன்னான்,

மக்களிற்கு தேவை

சினிமாவும் சீனி-மாவும்

தலைவர்களிற்கு தேவை

நாற்காலியும் நாட்கூலியும்

 

பொன்ராசா,

தவளையாய் இருந்து தத்துவம் பேசாதே

கவலையாய் கிடந்து காலத்தை நோகாதே

கீழ்நோக்கி நடந்து மேல்நோக்கி பார்
 

வானத்தை வசப்படுத்த உனக்கு கானமயில் தேவையில்லை

ஈழத்தை பலப்படுத்த உனக்கு இனியாரும் தேவையில்லை

 

மெல்ல எழுந்து நடந்தேன்……

காலோடு சேர்ந்து மனசும் வலித்தது…..

 

நன்றி,

Saturday, November 16, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்


இடித்தவன் தலையில்

இடி வீழாதோ-சிறை

பிடித்தவன் அரசின்

முடி தாழாதோ?

 

படைத்தவன் இல்லையோ-இல்லை

பார்ப்பனர் தொல்லையோ

உடைத்தவன் உதிரத்தை

குடித்தால் தகுமோ?

 

அம்மா..

முற்றத்தை இடித்தாயோ–உன்

முகத்திரையை கிழித்தாயோ?

சுற்றத்தை வெறுத்தாயோ-உன்

சுகத்தை நினைத்தாயோ?

 

முந்தானை விரித்து-அரசியலில்

முன்னுக்கு வந்தவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

மு.க.வின் மாளிகையா?

 

பல் இளித்து பாவாடை குறுக்கி

சினிமாவில் வென்றவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

சினிமா செற்றா

 

அம்மா

வாஸ்த்து பார்த்தீரோ

வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ

நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு

சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

 

பார்ப்பனரே…

பல்லக்கில் பவனிவந்த

தமிழன் இன்று

உங்கள் சொல் கேட்டு

பள்ளத்தில் வீழ்ந்தானே

 

முல்லைக்குத் தேர் கொடுத்த

தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு

முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க

ஒருதுண்டு துணியில்லை

 

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு

வீடுநிலமும் விதைநிலமும்

கொடுத்த தமிழனுக்கு

நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

 

நன்றி.