A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Saturday, November 16, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்


இடித்தவன் தலையில்

இடி வீழாதோ-சிறை

பிடித்தவன் அரசின்

முடி தாழாதோ?

 

படைத்தவன் இல்லையோ-இல்லை

பார்ப்பனர் தொல்லையோ

உடைத்தவன் உதிரத்தை

குடித்தால் தகுமோ?

 

அம்மா..

முற்றத்தை இடித்தாயோ–உன்

முகத்திரையை கிழித்தாயோ?

சுற்றத்தை வெறுத்தாயோ-உன்

சுகத்தை நினைத்தாயோ?

 

முந்தானை விரித்து-அரசியலில்

முன்னுக்கு வந்தவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

மு.க.வின் மாளிகையா?

 

பல் இளித்து பாவாடை குறுக்கி

சினிமாவில் வென்றவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

சினிமா செற்றா

 

அம்மா

வாஸ்த்து பார்த்தீரோ

வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ

நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு

சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

 

பார்ப்பனரே…

பல்லக்கில் பவனிவந்த

தமிழன் இன்று

உங்கள் சொல் கேட்டு

பள்ளத்தில் வீழ்ந்தானே

 

முல்லைக்குத் தேர் கொடுத்த

தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு

முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க

ஒருதுண்டு துணியில்லை

 

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு

வீடுநிலமும் விதைநிலமும்

கொடுத்த தமிழனுக்கு

நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

 

நன்றி.

No comments:

Post a Comment