A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Monday, November 25, 2013

புலி




சிங்கத்திற்கு வாழ்க்கைப்பட

புலிக்கு என்ன தலையெழுத்து?

 

புலிக்கு

பலதடவை குறிவைத்தார்கள்

தப்பிக்கொண்டது

இந்தத் தடவை பொறிவைத்ததால்

சிக்கிக் கொண்டதோ?

 

புலி வாலாட்டுவதில்லை

இப்போது புலி இல்லை அதனால்

தெருநாய்களும்  வாலாட்டுகின்றன

சொறிநாய்கள் கால்மேல் கால்போட்டு காலாட்டுகின்றன

 

எலி மருந்துக்கெல்லாம்

புலி சிக்குவதில்லை

புலிக்குத் தெரியும் அதன் இலக்கு

 

அன்று

சிலருக்கு புலியை பிடிக்கவில்லை-ஏனென்றால்

புலியின் மீது ஏறி சவாரி செய்ய முடியாது என்பதால்

 

இன்றும்

சிலருக்கு புலியை  பிடிக்கவில்லை

புலி இனி சரிவராது என்பதாலோ

 

மேனகையை அனுப்பியும்

புலியை வீழ்த்தமுடியவில்லை

மேதகுகள் சேர்ந்து வஞ்சகம் தீர்த்துவிட்டார்கள்

 

வேடன் மாறுவேடத்தில் வருவான் என்று

புலிக்குத் தெரியும்

வேடன் நவீன துப்பாக்கியோடு வருவானென்று

அதுக்கு எப்படித் தெரியும்

 

புத்தி மான்கள் குதூகலமாய்

அரியாசனம் ஏறுகின்றன

சிங்கத்திற்கு இரையாகப் போவது தெரியாமல்

 

வடகாட்டில் குரங்குகள் பட்டாசு கொளுத்துகின்றன

சிம்மாசனம் கிடைத்துவிட்டதாம்

 

புலியை  பிடித்தவர்களுக்கு- இப்போதும்

புலியைப்  பிடிக்கிறது

புலிக்கு  வால்பிடித்தவர்களிற்கு மட்டும்

இப்போ கிலி பிடித்திருக்கிறது

 

நன்றி,

அ.பகீரதன்

 

No comments:

Post a Comment