A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, December 5, 2013

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!


கருப்புச் சிங்கமொன்று-இன்று

காரிருளில் ஒளியுதடா

காலமெனும் படகேறி

கைகாட்டி மறையுதடா

 

நெல்சனெனும் பெயர்கேட்டால்

கல்மனசும் கரையுமப்பா

வெள்ளையனின் பள்ளியிலே-அது

அவன்பெற்ற பெயரப்பா

 

சட்டம் படித்ததானால்-வெள்ளையனின்

சட்டையை பிடித்தானப்பா

சட்டையைப் பிடித்ததனால்-சிறைச்

சட்டம்தான் கிடைத்ததப்பா

 

கருங்காலித் தடியொன்று

பெருங்காலம் சிறைகிடந்து

பெருங்குடல் சுருங்காமல்

வெளியாகி ஒளிதந்த கதையப்பா

 

பெருங்காலம் சிறைகிடந்தும்

அவனுடலுக்கிப் போகாமல்

அதுதாங்க முடியாமல்

அறைக்கம்பி தானுக்கிப்போன கதையப்பா

 

குருவி குளிக்கும் குளமென்று

காகத்திற்கு தடைவிதித்த கதையப்பா-அங்கு

சிறுஅறிவாளிச் சமூகமொன்று

பெருவாரிச்சனத்தை இரையாக்கிக்கொண்ட கதையப்பா

 

தடைவிதித்த அரசெல்லாம் பின்னாளில்

அவருக்கு குடைபிடித்த கதையப்பா

”ராஷ்கல்” என்ற நாவெல்லாம் பின்னாளில்

நோபல் பரிசுகொடுத்த கதையப்பா

 

சொல்லச் சொல்ல இனிக்குமடா

அவன் கதை-ஆனாலும்

நீளமாய்ப் போனால்

கவி உனக்கு கசக்குமடாதம்பி 

 

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!
 

நன்றி

No comments:

Post a Comment