A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, January 14, 2014

தைத்திருநாள் தைக்குதடா முள்ளாய்



அழிந்த அயல்


கிழிந்த ஆடை


மெலிந்த தேகம்


இதயத்தில் குவிந்த சோகங்கள்


 


பொங்க மனமின்றி விம்மி


அழுகிறது ஒருஉறவு அங்கு


 


மாதாந்த கட்டணங்கள்


வீட்டில் நாளாந்த கண்டனங்கள்


மனசில் இறுக்கம்


எண்ணத்தில் சுருக்கம்


 


பொங்க மனமின்றி சும்மா


பொங்கி படைக்கிறது ஒரு உறவு இங்கு


 


கிழிந்த பணநோட்டாய்


ஒட்டிக் கொள்ளத் துடிக்கிறது இரு உறவுகளும்


 


ஆறுமுகம் வீதி ”பசில் வீதி” ஆனதால்


முள்ளிவாய்க்காலில் மூத்தமகன் இறந்ததனால்


களத்திற்கு போனமகளை காணவில்லை என்பதனால்


சின்னதாய் கூட பொங்க மனசில்லை அங்கு பலருக்கு


 


சூரியன் கிழக்கில் எழவில்லை


பகிர்ந்துண்ண உறவில்லை


சக்கரை வாங்க மறந்ததனால்


சீனிப் பொங்கலானது பலர்வீட்டில் இங்கு


 


ரைஸ்குக்கரிலே பொங்கலாகி


குட்டி அறைக்குள்ளே படையலாகி


குளிர்சாதனப் பெட்டியிலே


குடிகொள்ளும் மாதக்கணக்காய் இங்கு


 


பட்டாசு வெடித்தாலும்


பயப்படும் சிறுபிள்ளை


பட்டகஸ்ரம் நினைவில்வந்து


பாடாய்படும் தாய்மனசு அங்கு


 


பெரியதாய் பொங்கியவன் கண்கள்


சிறியதாய் சுருங்கிக் கிடக்கிறது இங்கு


வலிதாய் இருந்த இனமொன்று


வலிதாங்க முடியாமல் தவிக்கிறது அங்கு


 


எண்திசையும் பெரிதாய் பொங்குகிறான் தமிழன்


எண்ணத்தில் சின்னத்தனமாய் அலைகிறான் தமிழன்


ஆணவத்தில் ஆடுகிறான் தமிழன்-அதைச்சொன்னால்


கோபத்தில் கோவணத்தை கிழிக்கிறான்


 


வந்த வழியை மறக்காதே தமிழா


சொந்த மொழியை
இழந்தாய் எனும் பழியை
ஏற்காதே தமிழா


 


வாழ்க தமிழ்! வளரட்டும் தமிழர் திருநாள்


 


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.


 


நன்றி


நட்புடன்,


அ.பகீரதன்

Saturday, January 11, 2014

புதுக்கவிதை என்றால் என்ன?


(பிரபல கவிஞர் மு.மேத்தாவின் கவிதை இது)

இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

மோனைத் தேர்கள்

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவும்

இல்லாத-

 

கருத்துக்கள் தம்மைத்

தாமே ஆளக்

கற்றுக் கொண்ட

 

புதிய

மக்களாட்சி முறையே

புதுக்கவிதை!

Thursday, January 2, 2014

பிறக்கட்டும் புதுவருடம்; பறக்கட்டும் உன் சிறகுகள்


நாலுதடி ஏறிவிட்டு

ஏணி முடிந்ததாய் எண்ணாதே!

ஏறு மேலே; இன்னும் மேலே ஏறு!

ஏணியில் இன்னும் இடமுண்டு; ஏறு!

 

ஏழுபடி ஏறிவிட்டு

கோபுரத்தை குறைவாய் எண்ணாதே

ஏறு மேலே; இன்னும் மேலே ஏறு!

கலசம் கையில் கிடைக்கும்வரை; ஏறு!

 

தொட்டதெல்லாம் துலங்கினால்

அது உன் துரதிஸ்டம்

தூக்கியெறியப்படுவாய் ஒருநாள்

அது உனக்கு பெருநஸ்டம்

 

ஏறடா ஏறு!  இதுநல்ல சமயம்

இலகுவாய் எட்டலாம் இமயம்

இஸ்டப்பட்டால் எல்லாமே சுலபம்

நஸ்டப்பட்டாலும் அதுநல் அனுபவம்

 

முன்னேறடா  ஒருதிக்கில்

அமரலாம் பல்லக்கில்

ஒழுகடா நல் ஒழுக்கத்தில்

ஓடுவாய் ஒருநாள் ஒலிம்பிக்கில்

 

ஏறடா எவரெஸ்ட்

அதுவரை நெவெர்றெஸ்ற்

அலுக்காமல் ஆற்று யுவபெஸ்ட்

திறமையை  வளர்த்திடு  இற்மஸ்ட்

 

அனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றியுடன்,

அ.பகீரதன்