A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, January 2, 2014

பிறக்கட்டும் புதுவருடம்; பறக்கட்டும் உன் சிறகுகள்


நாலுதடி ஏறிவிட்டு

ஏணி முடிந்ததாய் எண்ணாதே!

ஏறு மேலே; இன்னும் மேலே ஏறு!

ஏணியில் இன்னும் இடமுண்டு; ஏறு!

 

ஏழுபடி ஏறிவிட்டு

கோபுரத்தை குறைவாய் எண்ணாதே

ஏறு மேலே; இன்னும் மேலே ஏறு!

கலசம் கையில் கிடைக்கும்வரை; ஏறு!

 

தொட்டதெல்லாம் துலங்கினால்

அது உன் துரதிஸ்டம்

தூக்கியெறியப்படுவாய் ஒருநாள்

அது உனக்கு பெருநஸ்டம்

 

ஏறடா ஏறு!  இதுநல்ல சமயம்

இலகுவாய் எட்டலாம் இமயம்

இஸ்டப்பட்டால் எல்லாமே சுலபம்

நஸ்டப்பட்டாலும் அதுநல் அனுபவம்

 

முன்னேறடா  ஒருதிக்கில்

அமரலாம் பல்லக்கில்

ஒழுகடா நல் ஒழுக்கத்தில்

ஓடுவாய் ஒருநாள் ஒலிம்பிக்கில்

 

ஏறடா எவரெஸ்ட்

அதுவரை நெவெர்றெஸ்ற்

அலுக்காமல் ஆற்று யுவபெஸ்ட்

திறமையை  வளர்த்திடு  இற்மஸ்ட்

 

அனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றியுடன்,

அ.பகீரதன்

No comments:

Post a Comment