A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, November 24, 2013

யார் இந்த பொன்ராசா?


பொன்கொடுத்த பொன்ராசா

இப்போதும் அழுகிறான்

மண்போனது கவலையில்லலையாம்

தன்பவுண்  கேட்கிறான்

 

புலி வீழ்ந்த இடத்தில்

புல் முளைத்துவிட்டதாம்

பூங்கா கட்ட காசு கேட்கிறான்

மாவீரர்களுக்கு பூமாலை கட்டித் தருவானாம்

 

ஐக்கிய இலங்கைக்குள்

ஆயிரம் தீர்வாம்-கை

நக்கிய படியேமேலே வரலாமாம்

ஈழம் என்பது கோலமாம்-இது

கனகாலமாய் அலங்கோலமாம்

 

பொன்ராசாவுக்கு

ஃபெடரல் சிஸ்ரம் பிடிபடவில்லை

கேட்டால் பின்நாளில் பார்க்கலாம் என்கிறான்

ஏ9 வீதியைப் பார்த்து  ஏமாந்து போய்விட்டான் போலும்

 

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா,

ஒற்றை ஆட்சி ஒன்றுதான்

எங்களுக்கு மீட்சியாம்-அதற்கு

எஞ்சிய சனம்தான் சாட்சியாம்

கஞ்சியாவது குடித்தால் போதுமாம்

 

அப்படியென்றால்

ஈழம் என்ன எட்டாப்பழமா? என்றேன்

ஈழம் அதெல்லாம் எட்டப்பன் இருக்கும்வரை

கிட்டாது என்றான் அவன்

 

மீண்டும்,

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா சிரித்தபடி சொன்னான்,

ஈழம் எனப்படுவது நமது சாபம்

இந்தியா இருக்கும்வரை நமக்கது பாவம்

எதற்கடா தம்பி நமக்கு முற் கோபம்

 

பொன்ராசா,

ஈழம் என்பது நம்தேவை

முடிந்தால் செய்சேவை

இல்லையேல் அடக்கிவை உன்நாவை

 

மேலும் சொன்னேன்,

செல்வாவின் கொள்கை ஈழம்

அவர்சிந்தனை மிகப்பெரிய ஆழம்

பிரபா போட்டார் பெரிய பாலம்

அதைவிடாமல் பிடித்தால் லாபம்

 

பொன்ராசா நக்கலாய் சொன்னான்,

மக்களிற்கு தேவை

சினிமாவும் சீனி-மாவும்

தலைவர்களிற்கு தேவை

நாற்காலியும் நாட்கூலியும்

 

பொன்ராசா,

தவளையாய் இருந்து தத்துவம் பேசாதே

கவலையாய் கிடந்து காலத்தை நோகாதே

கீழ்நோக்கி நடந்து மேல்நோக்கி பார்
 

வானத்தை வசப்படுத்த உனக்கு கானமயில் தேவையில்லை

ஈழத்தை பலப்படுத்த உனக்கு இனியாரும் தேவையில்லை

 

மெல்ல எழுந்து நடந்தேன்……

காலோடு சேர்ந்து மனசும் வலித்தது…..

 

நன்றி,

No comments:

Post a Comment