A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, July 19, 2013

வாலி எனும் கவிவள்ளல்


வலிக்கு இன்று மருந்தாக-எங்கள்

வாலிக்கு வடிப்போமா ஒருகவிதை

வயல்எலி சேர்த்த நெற்கதிராக-எந்தன்

வாய்சொல் சேருமோ நற்கவியாக

 

திருச்சியில் உருவான தீக்குச்சி-அது

திருவிளக்கானது தமிழின் உச்சிக்கு

திருவரங்கம் பெற்றெடுத்த பகிரங்கம்-அதன்

திருக்கரங்கள் எப்போதும் கவிசுரக்கும்

 

பாட்டெழுதி வென்றாயே பத்மஸ்ரீ-உன்

பாட்டாலே பெற்றாயே பலவிசிறி

பாண்டவர் பூமி எழுதிய நீஞானி-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

முக்காலம் உணர்ந்த முனிவனும்-நீ

முக்காலா முக்காபில்லாவார்த்தை

சிக்காமல் போட்டா வித்தகனும்நீ-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

ஐம்பது ஆண்டுகளாய் எழுதியும்

குறைவேதும் இல்லை உன்பணியில்

ஐந்து தலைமுறைக்காய் எழுதியும்

குறையேதும் இல்லை உன்பணிவில்

 

கவிபாடும் உன்னழகில் எழில் கொஞ்சும்

உன்கதையே கவியாகும் அதைஎது மிஞ்சும்

உணர்வாலே குளிப்பாட்டி வார்த்தை கொட்டும்

உண்மைக்கவிஞன் என உனைஉலகம் போற்றும்

 

எங்களிற்காய் கவிபடித்த உன்வதனம்

எம்வாழ்வில் எப்போதும்அது உன்னதம்

எதுகையும் மோனையும் உன்வசம்

இனிஎப்போ காண்போமே உன்னிடம்

 

இந்த மகா கவிஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment