A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, May 4, 2012

காதலித்துப் பார்


என்விதியே ஒருதனி வழிப் பாதை
அங்கேஉன் விழியே  தனியொரு காதை
நினைவுகள் கனவுகள்  தினம் மலருது
வெறும் கவிதையாய் வெந்து கருகுது

நீயது நீலவிழியது மாநிறம் உன்அழகு
மேயுதுகண்ணு தாவுதுமனசு நீவந்து பழகு
வாடுது  துணைதேடுது நீஎந்தன் உலகு
தேடுது மனம்கூடுது உளமது இளகு

உன் இதழது உதடது தேனதுகசியுது  சொர்க்கம் 
சோர்வெது சுகமது  உன்மார்பதுநீஅழகிகள்  வர்க்கம்
உன்உடையது உன்இடையது என்விழிகளில் மரிக்கும்
மென்சிரிப்பொலி நற்கொலுசொலி என்செவியினில் தரிக்கும்

கருங்கூந்தலது கட்டுடல்மேனியது கொண்டது மாநேசம்
அழகிலே உன்திமிரது அசைவிலேநீ தேரதுஆகா அதுசுகம்
மலரிலும்  மல்லிமலரிலும்  இனியது  உன்வாசம்
என்மனசிலும் உள் உயிரிலும் நீயே  தினவாசம்

கடலதுதினம் அலையினை வருடுது அதுவாழ்தல்
உடலது உயிரது உன்அணைவினை தேடுதுகாதல்
மலரதுஅனுதினம் அதன்வாசனை நுகருது அதுமோகம்
மனசதுகொடியது உன்நினைவினை நாடுது இதுதாகம்

காதல்பழையது  காலவலியது வருவது சுலபம்
கழிவது தனிமையில் காலம்கழிவது அவலம்
கனிவது இனிமையில் காதல்பொழிவது உலகம்
கைகொடுப்பது காதல்தொடுப்பது கனிந்திடு கமலம்


உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment