A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, April 27, 2012

கருணாநிதி


கனிமொழியில் என்றுமே நல்ல கருணை
தன்மொழியில் எப்போதும் இல்லை சுரணை
தனிநாடு மீட்பாராம் சினிமா வர்ணனை
களத்திலே கைவிட்டாரே நம் கர்ணனை

கவிமொழி என்றுமே கைவைந்த கலை
காலத்தை வென்றுமே நிற்கின்ற சிலை
நாசூக்காய் பேசுவதில் அவர்தான் தலை
காசுக்காய் நக்கினாரோ எச்சில் இலை

தமிழ் அண்ணாவின் புகழ்காத்த தம்பி
ஈழத்து அண்ணாவை விழவிட்ட தும்பி
அகிலத்து தமிழர்கள் இருந்தாரே நம்பி
ஆனாலும் அப்பப்போ நீட்டுவாரே கம்பி

திருக்குவளை பெற்றெடுத்த தமிழ்ப் புலமை
திருநீற்றுக்குப் பணியாத திராவிடத் தலைமை
திருப்பணியாலா உனக்குள் என்றுமே இளமை
தீராதபகையானாய் உனக்கேன் இந்த நிலமை

நெஞ்சினில் கொஞ்சமும் இல்லை நீதி
பிறகேன் எழுதினீர் நெஞ்சுக்கு நீதி
நேர்மை தவறிய வஞ்சகச் சாதிநீ
பிறகேன் எழுதினீர் வள்ளுவப் பிரதி

மும்முறை முதலிரவு ஏறிய வீரா
ஐம்முறை முதல்வர் ஆன சூரா
தமிழ்மறை தாங்கிய தஞ்சை தேரா
தமிழ்மனம் பொங்குதே உனக்கு எதிரா

வறுமையில் அறிந்தீரே பணத்தின் அருமை
அதற்காக அள்ளிக் குவித்தென்ன பெருமை
அறத்திற்கு சொன்னீரே ஆயிரம் உவமை
அனைத்துமே உன் அவைக்கு எருமை

வசைபாட மனசின்றி தவிக்குதுஎன் தமிழ்ப்பேனா
வழிபோட மறந்தாயே உன்முகத்தில் உமிழ்ப்பேனா
உன்பெயரை என்பிள்ளைக்கு பெயராய் வைப்பேனா
உனக்காக இனியும் நான் தீக்குளிப்பேனா

உங்கள் நேரத்திற்கு நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

1 comment:

Anonymous said...

You are right, he exactly deserved what he (Karunaniii)is getting now..
Siva

Post a Comment