A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா


 
(பாலு மகேந்திரா )
 

எழுத வேண்டும் என

எத்தணிக்கிறது என்பேனா

 

எதை எழுதுவது?

எழுதி என்னாவது?

புழுதி படர்ந்த புத்தகமாய்

என் பேனா

 

ஆற்றாமை

அழுத கண்ணீராக……

தேற்றாமை

பெரும் துக்கமாக….

 

பாலு மகேந்திரன்

எங்கள் ஈழ மகேந்திரன்

கோடாம்பாக்கமே புருவம்

உயர்த்திய வானச் சந்திரன்

 

சிறுவயதில்

தீவிர  வாசிப்பு

தீரா  வெறியோடு

சினி்மா  நேசிப்பு

 

லண்டனில் பட்டப் படிப்பு

புனேயில் சினிமாப் படிப்பு

இறுதியாய் சினிமா மட்டுமே பிடிப்பு

உறுதியாய் அதுவே சுவாசத் துடிப்பு

 

முதல் படம்

”அழியாக் கோலம்”

சினிமாவில் அவருக்கு

அழியாக் கோலம்

 

ஐந்து முறை

தேசிய விருது

அதில் இரண்டு

ஒளியமைப்பிற்காக

 

 

பிடல் காஸ்ரோவை

பின்பற்றித் தொப்பி

கடல் கடந்து சாதித்த

ஈழத்தின் சிற்பி

 

படைத்தவனே பிரமிக்கும்

பன்முக ஆற்றல் அவர்க்கு

படைத்தார் ”பாலா” க்களை

நிலைத்தார் ”சீமான்” களாய்

 

சினிமாப்

பட்டறை வைத்தார்

பலருக்கு அங்கே

முகவுரை கொடுத்தார்

 

உன் பணி தொடர

பலர் வருவார்

உன் படம் போல

இனியார் தருவார்?

 

”வீடு” படம் எடுத்தபோது

வீடுபேறு அடைந்துவிட்டாய்








விடைபெறு தந்தையே-உன்






படை  வரும் நல் படைப்புக்களாய்


 

ஆன்மா சாந்தியடையட்டும்.


 

அ.பகீரதன்

No comments:

Post a Comment