A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, March 23, 2012

உயிருள்ள ரோஜா


உயிருள்ள ரோஜா ஒன்று-என்
உயிருக்குள் வீழ்ந்தாள் இன்று
அழகாலே மனசை வென்று-என்
உலகாக நின்றாள் இன்று

எல்லாமே அவளானாள்- எனக்கு
எப்போதும் தாயானாள்
உயிருக்குள் நிலையானாள்-என்
உண்மைக்கு விலையானாள்

கன்னத்தின் குழியாக-என்
எண்ணெத்தில் சுழியானாள்
காதலின் குறியீடாய்-என்
வாழ்விற்கு குறியானாள்

திறந்த மனசுடன் வாடி-உன்
பிறந்த மேனியை தாடி
ஆழ்ந்து உறங்கநான் ரெடி-நம்
ஆசை இறங்கலாம் கோடி

வாழ்க்கையொரு பொற்குகை-அங்கு
காதல்மட்டுமே இயற்கை
கட்டியணைக்கலாம் வாடிநம்
கட்டில்உடையலாம் வாநீ

இளமையொரு சொர்க்கம்-அங்குகாதல்
இல்லை என்பதே இல்லை
காதலென்பது இறைவன் தந்தது-அது
கடைசிவரைக்கும் உயிர்ப்பு தந்தது

போதை என்றால் என்ன-நீ போகும்
பாதை தான் பெண்ணே
மேதை என்றால் என்ன-வாழ்வில்
உன்காதல் தான் பெண்ணே

கடவுள் என்றால் என்ன-உன்
கனவு தான் பெண்ணே
இறைவன் என்றால் என்ன-நான்
இறக்கும்வரைக்கும் நீதான் பெண்ணே

அறிந்து கொள்ளடி பெண்ணே-உனக்காய்
அழிந்து போகவும்நான் ரெடி
மூச்சாய் இழுக்கிறேன் உன்னை-என்
முழு உலகமும் நீதான் பெண்ணே
 
உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment