A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Saturday, June 20, 2015

பண்பாடு இன்று படும்பாடு



பண்பாடு பண்பாடு
நம்பண்பாடு படும்பாடு
வலியோடு அதைப்பாடு
பயன்பாடு பற்றி பண்போடு பண்பாடு

உன்பாடு என்பாடு
நம்பாடு பெரும்பாடு நாய் படாப்பாடு
நம்பண்பாடு நல்ல தமிழ்ப் பண்பாடு
தெம்போடு தினவோடு தினம்தேடு

நம்நாடு தமிழ்நாடு நல்தாய்த் திருநாடு
வெளிநாடு வலுநாடு பெருநாடு
இருந்தும் குளிர்நாடு அது பிறர்நாடு
அது நமக்கு வெறும்கூடு

பண்பாடு பண்டைத் தமிழ்ப் பண்பாடு
இன்று படும்பாடு எல்லோர்க்கும் கண்கூடு
இதற்கு அன்போடு பண்போடு தடைபோடு
இல்லேல் நீ கூனோடு குருடோடு நடைபோடு

தமிழோடு தமிழிசையோடு தனிப்படையோடு
தவிலோடு குறளோடு தக்கவிசையோடு பக்கபலத்தோடு நீயோடு
திமிரோடு தமிழ்த் திமிரோடு நீபோராடு
இல்லேல் உன்பணக்காரப்பிள்ளை ஏந்தும் திருவோடு

(திருவோடு=பிச்சை கேட்கும் பாத்திரம்=கபாலம்)

நன்றி

அ.பகீரதன்

No comments:

Post a Comment