வங்கியாளர்கள்
வாக்கிங்போக-ஏழையோ
வாங்கிய கடனுக்காய்
வங்கிக்கு அலைகிறான்
வங்கியில்...
வஞ்சியரோ சிரிப்புமுல்லை
வஞ்சகம் சூழ்ச்சியில்லை
வாயாராப் புகழ்ச்சியில்லை
வட்டியில் மட்டும் கறால்
வங்கி...
மனிதன்
திருடனுக்கு பயந்து
திருடனிடமே சரணடைந்த இடம்
வங்கியாளர்கள்......
அறம் தெரிந்த
அறா வட்டிக்காரர்கள்
சட்டப்படி சுரண்டும்
சக்ஸஸ் சண்டாளர்கள்
வங்கியாளர்கள்.....
கோட்சூட் போட்ட
கொள்ளையர்கள்
பாட்காட் உள்ள
வெள்ளையர்கள்
ஏழையின் சாபத்தையும்
வரமாக்கும் வல்லுனர்கள்
கஸ்ரமர்ஸ் கஸ்ரமர்ஸ் என்று
கஸ்ரப்படுத்த வல்லவர்கள்
திருப்தி திருப்தி என்று
திருட நல்லவர்கள்
வங்கிகள்
வசூலிக்கின்றன வட்டியோடு
வாடிக்கையாளனின் வயிற்ரெரிச்சலையும்
எழுத்தறிவிக்க பணமில்லை
சுட்ட பணமெல்லாம்
சும்மா சுவிஸ் வங்கியில்
குடிமகனுக்கு குடிநீரில்லை
தலைவர்கள் நிரப்புகிறார்கள்
நடிகையின் வங்கிக்கணக்கை
காந்திக்கும் காமராஜருக்கும்
வங்கிக்கணக்கு இல்லை-ஏழையின்
வயிற்றுக்கணக்கு புரிந்ததனால்
சுப்பனுக்கு வீசாகாட்
சும்மாயிருப்பவனுக்கும் கோல்ட்காட்
சுண்டல்காரிக்கும் சூப்பர்லோன்
சுரண்டுவது தினவட்டியை
வக்கீலுக்கும்
வக்கில்லாதவனுக்கும்
வங்கியிலே வாய்ப்பு
வட்டியிலோ ஏய்ப்பு
வங்கிகளும் வஞ்சிகளும் ஒரேரகம்
தமக்குத் தேவையென்றால் வழிவார்கள்
நமக்குத் தேவையென்றால் நழுவுவார்கள்
வங்கி மின்சாரம் போல
கையாளத்தெரிந்தால் கைலாபம்
கையாலாகாவிடின் கைலாசம்
ஏழையின்ன் கஸ்ரம் போக
வங்கியின் சிஸ்ரம் கிறாஸாக.....
கவனம்,
வங்கிகள்
கடைசிமூச்சுவரை
கருணைமனுவை ஏற்ப்பதில்லை.
நட்புடன்,
அ.பகீரதன்
No comments:
Post a Comment