A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, December 2, 2011

தொலைபேசி

எல்லாமே விலைவாசி
எல்லோரிடமும் தொலைபேசி
செல்லில்லா வாசி
செல்லாக் காசாகி

மௌனத்தை மட்டுமே
தொலைபேசி இரசிக்கிறது...

சிவனுக்கு உடுக்கை
யமனுக்கு கயிறு
இவனு(ளு)க்கு தொலைபேசி

தொலைபேசி
இவளுக்கு மூன்றாம் மார்பு
இவனுக்கு ஆறாம் விரல்

தொலைபேசி
உடலோடு கட்டுண்ட
ஐந்தாவது உடை

தொலைபேசி
மனசோடு ஒட்டுண்ட
நவீன மச்சம்

முடிந்தவரை பேசுகிறான்
இருந்தும் வருந்துகிறான்
முடிவெட்டும் போது
முடியவில்லை என்று

மாட்டு வண்டியும் பஞ்சராகிறது
ஓட்டுனரிடம் செல் இருப்பதனால்
பத்துவயதிலே பருவமடைகிறாள்
பள்ளிப்பையினுள் செல் இருப்பதனால்

தொலைபேசி சிரிக்கிறது.....
உனக்கு பில்கட்ட
நானென்ன பில்கேட்ஷா-காதலன்
வக்கில்லை பில்கட்ட
வழியாதே பிளீஸ்-காதலி

தொலைபேசி அழுகிறது....
அடிக்கடி அழைக்காதே-காதலி
இடைக்கிடையாவது அழையடாமகனே-தாய்

தொலைபேசி சிணுங்குகிறது....
வீகெண்டிலும் படுபிஸியாம்
பேய்மென்ற்ரோ வெறி லோவாம்

தொலைபேசி சபிக்கிறது....
விபச்சாரியிடமும்- கழிவு
விலைபேசும் மனிதர்களை

தொலைபேசியில்...
ஊமைக் காதலியும்
ரெக்ஷ்ற் அனுப்புகிறாள்
பூசாரிக்கும் ஆர்டர் வருகிறது

தொலைபேசிக் காதலில்
தொலைந்து போனது காலம்
குலைந்துபோனது குடும்பம்

கையில் கடிகாரம்
காலம் மனிதனின் கையில்
கையில் தொலைபேசி
மனிதன் காலத்தின் கையில்

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment