A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, November 18, 2011

காதலியின் கல்லறை (பகுதி 1)


எழுதக்கூடாத ஒன்றை
எழுத வைத்துவிட்டாள்
என் காதலி

ஈகோவில் பிரிந்துபோனாய்-ஒரு
ஈகூட இங்கு இல்லை(கல்லறையில்)

யாரோடு கதைத்துவிட்டு-எனை
வேரோடு வீழ்த்திவிட்டாய்

மிஸ்கோல் விடுகிறவள்
மிஸ்ஸாகி கிடக்கிறாள்

என்மிஸ்சாக வேண்டியவள்
ஏன்மிஸ்சாக வேண்டுமய்யோ

என் இதயத்தில் வீழ்வதென்று
நீ இடம் மாறி சுடுகாட்டில் வீழ்ந்தாயோ?

என் உயிருக்குள் வரும்வேளை-உஷ்ணமாகி
உன் உயிரை சிதைத்தாயோ?

உன் விளக்கை ஏற்றி வைத்து-பாதகி
என் விளக்கை அணைத்துவிட்டாய்

என்ன அவசரத்தில்
ஏற்றி வைத்தாய் அவ்விளக்கை
இக் கலியுகத்தில்
எரிந்தபடி கழிகிறது  என்வாழ்க்கை

பள்ளிச் சிறுமியடி-என்
பாவாடை தேவதைநீ
பாடையிலே போகையிலே-மனசு
பத்தி எரியுதடி

கண்ணகியின் தங்கையடி-என்
கவிதைகளின் அங்கமடி
உன்முகத்தை மூடுகையில்
என்உசிரு போகுதடி
 
நிலாவில் தனித்திருந்து
நித்தமும் கதைபேசி-என்மனதில்
சுத்தமாய் குடிகொண்ட-என்சித்திரமே
நிலவுக்கே நீ சென்ற மர்ம என்ன?

வயசுக்கு வந்து ஓராண்டில்-என்
வாழ்வுக்குள் வந்தவளே-பெரிய
வயதாகிப் போய்ச்சுதாடி-ஏன்
சாவுக்குள் வீழ்ந்துகெட்டாய்

பச்சை மரத்தாணிபோல-என்
இளமைக்குள் வந்தவளே-என்னை
கொச்சைப் படுத்தவென்றா
கொடிநஞ்சை அருந்திவிட்டாய்

செத்துத் தொலைந்தாவது
சேர்ந்திடுவேன் உன்னோடு
சொர்க்கத்தில் நீயிருப்பாய்-அங்கே
யார்விடுவார் இப்பாவியை?

இறந்தும் உயிரோடு
வாழ்கிறாய் என்னில்
உயிரோடு இருந்தும்
இறந்து கிடக்கிறேன் உன்னில்

வந்துவிடு என்னோடு
வாழ்ந்திடுவோம் ஃபண்ணோடு-அல்லது
கலந்திடுவேன் உன்னோடு
வீழ்ந்திடுவேன் மண்ணோடு

உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment