A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, November 11, 2011

காதல் பரவசம் (பகுதி 3)


ஏனடி இப்படி அழகாய் இருக்கிறாய்
பார்வதியா உனக்கு
தாய்ப்பால் ஊட்டினாள்

ஏனடி இப்படி இனிக்கிறாய்
ஐஸ்கிறீம் கடையிலா
பிறந்தாய்

என்னடி விலை கொடுத்தாய்-உன்
சுடிதாருக்கு இத்தனை
தூக்கலாய் இருக்கிறாய்

லஞ்சமா கொடுத்தாய்
பிரமனுக்கு-இப்படி
சூப்பராய் இருக்கிறாய்

என்ன தவம் செய்தாய்?
நல்ல கவிதையை
சுமக்கிறாய் கூந்தலாய்

ஏனடி எனை மயக்கிறாய்?
சொல்லியா செய்தாய்
உன் பல்வரிசையை

ஏனடி  எனைக் கொல்லுறாய்?
உன்மார்பு கச்சைகள் என்ன
மர்லின் மன்றோவினதா?

ஆகா இது காதா-அல்லது
காமனின் தூதா?
சுண்டியிழுக்கிறது என்னை

அம்மாடியோ இது இதழா?- தேனீக்கள்
வட்டமிடும் இளநிலவா?
கசிகிறது தேனாய்

மயக்க விழியா?
மன்மத குழியா?
கவிழ்ந்து போகிறேன் சுத்தமாய்
 
இஞ்சி இடையா?
இராவணன் படையா?
வீழ்ந்து கிடக்கிறேன் மொத்தமாய்

பிளீஸ், வெட்டாதே இமையை
வெட்டுண்டு போகிறது
என் இதயம்

கோதாதே
உன் கூந்தலை
கோதாகிறது என் ஆண்மை

முகத்தோரமாய் விழுகின்ற
உன்கேசத்தில் ஒன்றையாவது தந்துவிடு
அதுபோதும் ஜீவிக்க

பூஜையறை எனக்கில்லை
தினமும் பூஜிக்கிறேன்
உன் வருகைக்காக

அழுக்காகிப் கிடந்த
என் அறையெல்லாம்
அழகாகி ஜொலிக்கிறது
உன் வருகைக்காக

வந்து வந்து போ
சும்மா-வரங்கள்
ஒன்றும் வேண்டாம்

தந்து விட்டுப் போ
உன் துப்பட்டாவை-அதுதான்
தூக்குக்கயிறாக வேண்டும்-நாம் பிரிந்தால்

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment