A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, February 3, 2012

சுதந்திர தினம்


தேசியக்கொடியை முகர்ந்தேன்
தேசியக்கீதத்தை இசைத்தேன்
தேசமே உயிரிலும் மேலேன
தெருவிலே விழுந்து புரண்டேன்

உலகே ஊரென்றானபின்
தேசமென்பது தேவைதானா?
பறக்கமனிதன் கற்றுக்கொள்ள
பரந்தவெளிக்கு எல்லையென்ன?

பிறப்பிலும் பெரிது சுதந்திரமே
பிறநாட்டில் அது நிரந்தரமே
பிறப்பின் பயனே சுதந்திரமே
பிறந்தநாட்டில் அதை வாங்கணுமே

வீடே சிறையென்றானபின்
வீதியில் எங்கே சுதந்திரம்
நாடே சிறையென்றானபின்
நமக்கு எதற்கு சுதந்திரம்

நீதித்துறையே தெய்வமடா
காவல்துறையே கடவுளடா
இவை ஆள்பவர் கையானால்
அங்கே சுதந்திரம் பொய்யாகும்

கோயில்கள் யாவும் சுதந்திரமாய்
கொள்ளையடிக்கிறார் தந்திரமாய்
பார்வையில் எல்லாம் சுதந்திரமாய்
பாடாய்படுத்துகிறார் யந்திரமாய்

மாதவியின் சுதந்திரமா
கோவலனின் சுதந்திரமா
பாண்டியனின் சுதந்திரமா
அக்கோவலனை வீழ்த்தியது?

துப்பாக்கியின் சுதந்திரமா
துர்ப்பாக்கிய சூழ்நிலையா
துஸ்டர்களின் சூழ்ச்சியா
எம்காவலரை தாழ்த்தியது?

சுதந்திரம் கேட்ட மனிதருக்கு
சுடலை காட்டிய என்மண்ணே
விடுதலை கேட்ட மனிதருக்கு
தலையை ஒடித்த கொடுமையென்ன?

இலங்கை யாப்பில் சரக்கிருக்கா?
சரத்திற்கே அங்கே சரத்தில்லை
சனத்திற்கு எங்கே சரத்திருக்கும்?

சரத்திற்கு சிறை
கருணாவிற்கு அரியாசனம்
சுதந்திரத்தாயே உனக்கு போதையாடி?

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment