A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, February 24, 2012

கற்றுக் கொண்டவை


என்னவென்று நான் சொல்ல
சீழ்பிடித்த இவ்உலகை வெல்ல
எல்லையில்லா வாழ்வை வெல்ல
தொல்லையில்லா என்னவழியை சொல்ல

சுயநலமாய் மனிதரெல்லாம் ஓடுகிறார்
சுயவிளம்பரத்தை தனதாக்க நாடுகிறார்
சுயபுத்தியாலே உன்வாழ்வை ஓட்டப்பாரு
சுரண்டுகின்ற உலகைவென்று ஓடப்பாரு

பாலுக்குள்ளே நீரைக்கலக்கும் காலம்மாறி
நீருக்குள்ளே பாலைக்கலக்கும் காலமாச்சு
பாருக்குள்ளே உறவுகூட காசாச்சு
பாசம்கூட ரொம்ப தொலைவாச்சு

காந்திமொழி யாருக்குப் புரியுதப்பா
காசுவழி நீபோனா புரியுமப்பா
கார்ல்மாக்ஸை விடாப்பிடியா தொடர்ந்தாங்க
காணிநிலம்வீடு சீதனமா கேட்கிறாங்க

நாமிருக்கும் பூமிரொம்ப டேஞ்சரப்பா
எல்லாமனசுக்குள்ளும் பேராசையெனும் கான்சரப்பா
நல்லவனை கண்டுரொம்ப நாளப்பா
நல்லவனாய் கொஞ்சக்காலம் வாழனப்பா

ஐந்துமுறை முதல்வரானார் நம்பாஷையாலே
ஐந்தறிவு ஜீவனானர் தன்ஆசையாலே
முடவனென்ன முதல்வரென்ன மனிதனொன்று
முடியும்வரை போராடு நேர்மைநின்று

நெடுந்தூரம் செல்ல வேணாம்
நேர்வழியில் மெல்ல நட
தொடும்தூரம் தொலைவில் இல்லை
தொடர்ந்து நடை போடு

குடிசையிலும் கோபுரமாய் வாழலாம்
குணமுள்ள மனிதனுக்குஇது நிகழலாம்
ஞானியல்ல யோகியல்ல நாங்களப்பா
நாடறிந்து நடப்பறிந்து வாழுங்கப்பா

சுயநலமாய் வாழ்வதிலே நன்மையுண்டு
கொஞ்சம் பொதுநலத்தை சேர்த்துவாழனப்பா
திறந்தவெளி சிறைச்சாலையிலே நம்மவாழ்க்கை
சிறந்தவழி வேறிருந்தா எனக்கும்சொல்லனப்பா

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment